Wednesday, April 9, 2014

மத அரசியலும் 370-ம்

      டதுசாரிகளும், நம்நாட்டு 'மதநல்லிணக்கவாதிகளும்',  மற்ற அரசியல் கட்சிகளும், காங்கிரஸ்கார்களும் Article 377 (ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு சட்டம்) ஐ கூட இவ்வளவு ஆக்ரோஷமாக எதிர்த்ததில்லை (கேட்டால் முற்போக்கு சிந்தனையாளர்கலாம்) ஆனால் பெண்ணுரிமை மீறல், தீவிரவாத ஆதரவு, பிரிவினைவாதம், பொருளாதார சீரழிவு போன்றவற்றிக்கு காரணமாக இருக்கும் Article 370 (காஷ்மீருக்கான தன்னாச்சி உரிமை) ஐ எதிர்க்க தயங்குகிறார்கள். இவ்வளவு நல்லவர்கள் ஆதரிக்கும் அளவிற்கு அது என்ன காஷ்மீரை காப்பாற்றும் ஒன்றா??? 

Article 370:

       1947-ல் இந்திய பிரிவினையின் போது காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினையில் பாகிஸ்தான், காஷ்மீர் தன் நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் அல்லது அதற்கு சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்று முரண்டுப்பிடித்தது. அதன் விளைவாக பிரதமர் ஜவகர்லால் நேரு இந்த Article 370-ஐ அமல்படுத்தினார். இதன்படி காஷ்மீருகென்று தனி கொடி, சின்னம் மற்றும் சட்டங்கள். மேலும் வெளிநாட்டுக்கொள்கைகள் (Foreign Affairs),  பாதுகாப்பு (Defence), நிதி (Finance), மற்றும் தகவல்தொடர்பு (Communication) போன்றவைகளில் மட்டும் இந்திய சட்டத்திற்கு உட்பட்டு காஷ்மீர் நடந்துக்கொள்ளவேண்டும். இவைகளுக்கு அப்பாற்பட்டு ஏதேனும் சட்டம் இயற்ற இந்திய அரசு காஷ்மீர் சட்டசபையின் அனுமதிப் பெற்றாகவேண்டும் என்பதே. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கான சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது. அதாவது வேருமாநிலத்தை சேர்ந்த ஒரு நபரால் காஷ்மீர் உள்ள நிலத்தை வாங்கமுடியாது, வியாபாரம் செய்ய அனுமதி இல்லை, அங்கு சென்று படிக்ககூட அனுமதியில்லை என்னும் அளவிற்கு. சுருக்கமாக சொன்னால் ஒரு பெரியநாட்டில் உள்ள தனி நாடு. 

       போதும் மேலும் சொன்னால் குழப்பம் ஏற்படவாய்புண்டு. என்றால் பொருளாதாரம் போல சட்டமும் மிகவும் குழப்பக்கூடியதே என்பதால்..

       இதன் விளைவுகளை பார்ப்பதற்குமுன் அது எப்படி இயற்றப்பட்டது என்று பார்த்துவிட்டால் தேவையில்லாத குழப்பத்தை தவிர்கலாம். கொஞ்சம் வரலாறுதான் ஆனால் வரலாறு மிகவும் முக்கியம் நண்பரே!!!

   1947 நடந்த போரில், காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் லபக்கிக்கொண்டு (10 மாவட்டங்கள் மட்டுமே கொண்ட) ஆசாத் காஷ்மீர் என்று பெயரிட்டு சுயாட்சி வழங்கியது. அதன் சுயாட்சி பெயரளவில் மட்டுமே. இங்குதான் மக்களை கடத்தி ஜிகாதிகளாக மாற்றுவது அதிகம். ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துகொள்ளுதல், பெண்களுக்கான கல்வி மறுப்பு, ஆயுதப்பயிற்சி போன்றவைகள் நடக்கும். காஷ்மீரின் மற்றொரு பகுதியை தான் இந்தியா வைத்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவு உறுதி செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் சில முஸ்லிம் அடிப்படைவாதிகளை தூண்டிவிட்டு முஸ்லிம்கள் பெரும்பான்மை பெற்ற காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்று கூறியது. ஆனால் காஷ்மீர் மன்னராக இருந்த ஹரி சிங் மகாராஜா இந்தியாவுடன் இணைய விரும்பினார் ஆனால் மக்கள் (முஸ்லிம்கள் மட்டும்) பாகிஸ்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்று விரும்பினர். இந்த சிக்கலின்விளைவாக ஐநா சபையும், பிரிட்டிஷ் அரசும் சேர்ந்து இடியாப்ப சிக்கல் ஏற்ப்படுத்தும் விதமாக காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்க அறிவுரை(?)க்கூறியது. பாகிஸ்தானும் அதை கண்மூடித்தனமாக ஏற்று தன்னாட்சிக்காக முரண்டு பிடித்தது. இதனால் இந்திய அரசு காஷ்மீரில் Article 370 ஐ கொண்டுவந்தது. காந்தி, வல்லபாய் பட்டேல், மேலும் பலபேர் இதை எதிர்த்தார்கள் ஆனால் நேரு மட்டும் விடாப்பிடியாக மற்றவர்களை உதாசீனப்படுத்தி, இதைக்கொண்டுவந்தார் (இதில் நேருவுக்கும் பட்டேலுக்கும் பிரச்சினை உண்டானது). நேருவுக்கு உதவியாக இருந்தவர் நம்மூர் கோபால்சாமி ஐயங்கார் என்பது கூடுதல் தகவல் (தஞ்சாவூரை சேர்ந்தவர்).

     போதும் உன் வரலாறும் நீயும் என்கிறீர்களா?? சரி. இனிமேல் இதற்கு வரலாறு சொன்னால் போர் அடித்துவிடும். இதனால் ஏற்பட்ட விளைவுகளை பார்ப்போம்.. 
  • அங்குள்ள மக்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
  • மற்ற மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டன. அண்மையில் நடந்த சோம்நாத் கோவில் விவகாரம்கூட இதன் விளைவே.
  • பெரும்பாலான இந்து சீக்கிய மக்கள் கத்தி முனையில் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர்.உலகிலேயே மனிதஉரிமை மீறல்கள் குறிப்பாக பெண்ணுரிமை மீறல்கள் காஷ்மீரிதான் அதிகம்.
  • மனித உரிமை மீறல்கள் பெரிது அரங்கேறியது. இருபது வருடங்களில் 24 பெரிய அளவிலான கலவரங்கள், கொன்றொழிப்புகள் நடந்துள்ளது.
  • பெண்களின் அடிப்படை உரிமைகள் கூட மருதழிக்கப்பட்டது. 1990-ல் இருந்து 20000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 
  • இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மூலம் மற்ற மதத்தினரின் உரிமைகள் பறிக்கப்பட்டு தற்கொலைகளுக்கு தூண்டப்படிருக்கிறார்கள்.
  • காஷ்மீரை சேர்ந்த பெண் மற்ற மாநிலத்தை சேர்ந்த ஆணை திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணுக்கு காஷ்மீரில் குடியிருக்க அனுமதி இல்லை என்னும் சூழல் உருவானது. மத்திய அமைச்சர் சச்சின் பைலட் காஷ்மீரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதால் இந்த பிரச்சினையை அவர் சந்தித்தார். ஆனால் அந்த மாநிலத்தில் உள்ள ஆண்களுக்கு இந்த சட்டம் விதிவிலக்கு
  • மற்ற மதத்தை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள பல்கலைகழகங்களில் சேர 2-5% அளவிற்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • பிரிவினைவாதிகளை ஊக்குவித்ததின் விளைவாக சட்டத்திற்கு புறம்பான வேலைகள் அரங்கேறியது. தீவிரவாதிகளுக்கு புகலிடமாக அமைந்தது.
  • பாதுகாப்பில்லாத மாநிலம் என்பதால் முதலீடுகள் பாதிக்கப்பட்டு வேலையின்மை ஏற்பட்டது. பெரும்பாலான மக்களின் தொழில் விவசாயம்தான்.
  • மதக்கல்வி பெரிதும் ஊக்குவிக்கப்பட்டு அறிவுசார்கல்வி பாதிக்கப்பட்டது.

இவைகள் எல்லாம் இன்னும் நிகழ்ந்துக்கொண்டிருப்பதற்கு காரணம் இந்திய அரசு இந்த விவகாரங்களில் தலையிட அனுமதியில்லை என்பதே..

தேவையா இந்த Article 370?

        பாஜக தன் 2014 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் Article 370-ஐ ரத்து செய்து ஒரே சட்டம், ஒரே நாடு என்று கூறியுள்ளது. மற்ற எந்த ஒரு கட்சியும் வாய்திறக்கவில்லை. ஆம் ஆத்மி ஒருப்படி மேலேசென்று காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுத்தரலாம் என்று கூறுகிறது. மதநல்லிணக்கவாதிகள் பாஜக மத அரசியல் நடத்துகிறது என்று குற்றம் சாட்டுகின்றன. 
என்னது முடிவா?? நான் இதை சொல்வதின் நோக்கம் உங்கள் சிந்தனையை தூண்டுவதற்கு தானே அன்றி என் முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல. எது நியாயம் என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்..

Tuesday, March 4, 2014

வெள்ளையானை - புத்தகவிமர்சனம்


      சமீபத்திய சென்னை புத்தக கண்காட்சியில் ஜெயமோகனின் 'வெள்ளையானை' புத்தகம் வாங்க நேர்ந்தது.. அரசியல் புத்தகங்களே பெரும்பாலும் படித்து சலித்துவிட்டதால் ஒரு நாவல் வாங்கலாம் என்ற விளைவே 'வெள்ளையானை'. இதற்க்கு முன்னால் ஜெயமோகனின் சிறிய நாவலான 'நூறு நாற்காலிகள்' படித்தேன். அவரின் எழுத்துக்கள் மிகைப்படுத்தப் படாமல் எதார்த்தமாக இருந்ததே என்னை 'வெள்ளையானை' மீது ஆர்வம் கொள்ளச்செய்தது. நிற்க.

       புத்தகம் - 1870களில் ஏற்ப்பட்ட மாகாண பஞ்ச காலாத்தில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த (பிரிஷ்க்காரன்அல்ல ஐரிஷ்காரன் ) எய்டன் சென்னை மாகாண தளபதியாக பதவி ஏற்கிறான். இறக்க குணம் உள்ளவன். நல்லவன். இப்போது சென்னை கடற்கரையில் இருக்கும் ஐஸ் ஹவுஸ் (விவேகானந்தர் இல்லம்) கட்டிடத்தில் அமெரிக்காவை சேர்ந்த கம்பெனி ஐஸ் இறக்குமதி தொழிலை நடத்தி வருகிறது. அங்கு வேலைசெய்யும் இரண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் கொல்லப்படுகின்றனர். விசாரணையை எய்டன் நடத்துகிறான் ஆனால் சாதி வேறுபாடுகள் மூலம் அவர்களுக்கு அவனால் நீதியைப்பெற்றுத்தர முடிவதில்லை. மேலும் அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு பிரச்சினை அதிகரிக்கிறது. புத்தகத்தின் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த அறிவாளியான காத்தவராயன் என்பவன் மூலம் சேரிப்பகுதிகளுக்கு செல்கிறான். அவர்களின் நிலையை கண்டு கண்ணீர்விடுகிறான். பஞ்சம் ஏற்ப்பட்ட பகுதிகளுக்கு செல்கிறான் அவர்களின் நிலைமை மேலும் அவனை மனதளவில் துன்புறுத்துகிறது. பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் அவனின் உயர் அதிகாரிகள் எப்படி அவன் செய்யும் நல்லவைகளை தடுக்கின்றனர். அவர்களின் சுயநலத்திற்காக சாதிய கொடுமைகளை அவர்கள் ஆமோதிக்கின்றனர், இந்தியர்களின் சாதிவேற்றுமைகளை பயன்படுத்தி மதம் மாற்ற கிறிஸ்துவ அமைப்புகள் நல்லது செய்கிறோம் என்ற போர்வையில் வந்ததுப்பற்றி விரிவாக, அழுத்தமாக, கற்பனை இல்லாமல் சொல்கிறது 'வெள்ளையானை'.


                                    (மாகாண பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்)



மாகாண பஞ்சத்தைப் பற்றி பெரும்பாலும் நாம் உண்மைத் தகவல்களை திரட்டவே முடியாது. அப்படியிருந்தும் கிட்டத்தட்ட எல்லாத் தகவல்களையும் சேகரித்திருக்கிறார்.  (ஆனால் அதில்வரும் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதை என்னால் ஏனோ நம்பமுடியவில்லை). அந்த பஞ்சத்தில் பெரும்பான்மையினராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 2 கோடி பேர்(!) (ஹிட்லர் கொன்றது 60 இலட்சம் பேர்) இறந்ததன் மூலம் அவர்கள் சிறுபான்மை சமூகத்தினரானார்கள் என்பதுமட்டும் மறுக்கமுடியாத உண்மை. ஹிட்லரைவிட நம் முன்னோர்கள் சாதி, தீண்டாமை எனும் போர்வையில் மூர்கத்தனமாக இருந்தது பற்றி நினைக்கும்போது இந்த நாவல் அமைதியாக நம்மை குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு நாம் இழைத்த துரோகங்களின் பாவம் நம்மை இன்னும் ஏன் தாக்காமல் இருக்கிறது என்று என்னை என்னிடமே கேள்விகேக்கச் செய்கிறது. அப்போது ஏற்ப்பட்ட தொழிலாளர் போராட்டத்தை பற்றியும் இந்தநூல் விளக்கமாக பேசுகிறது.

    மொத்தத்தில் எழுத்துநடை சற்றே கடினமாக இருப்பினும், கண்ணில் நீர்வடிய செய்கிறார் ஜெ. மோ